Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார்

அக்டோபர் 10, 2019 04:17

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்துப் பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், `இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்த வீராங்கனை தற்போது இந்த வீட்டில் இருக்கிறார். 

நாங்கள் இருந்த வீடு இது. இப்போ அலுவலகமாக இருக்கிறது. இங்கே அவர்களை வரவேற்பதில் நாங்களும், நண்பர்களும் பெருமைப்படுகிறோம். இது கட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. தேசத்தின் பெருமையைக் கொண்டாடும் ஒரு விஷயம்’ என்றார். 

தொடர்ந்து பேசிய பி.வி.சிந்து, `எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல். அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரின் படங்களைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய ஒலிம்பிக் குவாலிஃபிகேஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான் என்னுடைய முழுத் திறனை அதில் வெளிப்படுத்துவேன். அதேபோல டோக்கியோ போட்டிக்காகவும் தயாராகிவருகிறேன்” என்றார். 

தலைப்புச்செய்திகள்